Thayagam Tamil Radio Australia

இலங்கையின் நெருக்கடிக்கு அவுஸ்திரேலியா உதவும்:உள்துறை அமைச்சர்-31

September 22, 2022

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்திற்குள் இருந்துக்கொண்டு இலங்கைக்கு உதவுவதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேயார் ஓ நேயில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் இலங்கைக்கு உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இலங்கை அரசின் வருமானத்தை அதிகரிக்கவும் இயற்கை மின்சாரத்தை தயாரிக்கும் வேலைத்திட்டத்தை வெற்றியாக்கிக்கொள்ளவும் அவுஸ்திரேலிய உதவும் எனவும் கிளேயார் ஓ நேயில் கூறியுள்ளார்.