Thayagam Tamil Radio Australia

அனைத்து கடன் வழங்குநர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் – 12

September 21, 2022

கடனாளிகளுடன் ஏதேனும் உடன்படிக்கைக்கு வரும் முன்னர் நிபந்தனைகளை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

அனைத்து கடன் வழங்குநர்களுடனும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறந்த கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.