யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி உட்பட வடக்கு – கிழக்கு பகுதிகளில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் தமிழர் இனப்படுகொலை தொடர்பில் நீதி கோருவதற்காக, தமிழ்த் தேசியக் கட்சிகளும் பொது அமைப்புகளும் இணைந்து இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்துள்ளன.
இதேவேளை, இத்தகைய கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கைகள் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
Post Views: 363