மேற்கு ஆசியாவில் முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
சுமார் 5 லட்சம் பேர் காசாவில் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாக ஐ.நா வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
“காசாவில் நிலவும் உணவு பஞ்சம் தடுக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், இஸ்ரேல் விதித்த தடை காரணமாக அப்பகுதிக்கு உணவு கொண்டு செல்ல முடியவில்லை” என ஐ.நா நிவாரண உதவி பிரிவு தலைவர் தாமஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மறுப்பு
இதற்கு பதிலளித்த இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், “காசாவில் பஞ்சம் எதுவும் இல்லை. ஹமாஸ் பரப்பும் பொய்யான தகவலின் அடிப்படையில்தான் இது கூறப்படுகிறது” என திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நிலைமை மேலும் மோசமடையும் அபாயம்
- கடந்த 15ம் திகதி நிலவரப்படி காசாவில் பஞ்சம் ஏற்பட்டது ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
- வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் டெய்ர்-எல்-பலாஹ் மற்றும் கான் யூனிஸ் பகுதிகளிலும் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.
- காசாவில் தினசரி ஐந்தில் ஒரு வீடு, மூன்றில் ஒரு குழந்தை, மேலும் ஒவ்வொரு 10,000 பேரில் இருவர் பசி அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழக்கின்றனர் என ஐ.நா. உணவு பாதுகாப்புக் குழு (IPC) எச்சரித்துள்ளது.
உயிரிழப்புகள் அதிகரித்தன
2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலுக்குப் பின், கடந்த 22 மாதங்களாக தொடரும் மோதலில்:
- சுமார் 62,192 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
- அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post Views: 217