விக்டோரியா அரசு குழந்தைகள் பாதுகாப்பை அதிகரிக்க சட்ட அமைப்பில் பெரிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது.
மெல்பேர்ண் குழந்தை பராமரிப்பு மையங்களில் Joshua Dale Brown குறித்த தொடர்ச்சியான கொடூரமான குழந்தை பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளது.
விக்டோரியா முதல்வர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்ததாவது, Independent Rapid Child Safety Review மூலம் வழங்கப்பட்ட *22 பரிந்துரைகளும் செயல்படுத்தப்படும்.
வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில், குழந்தைகளுடன் தனித்தனியாக வேலை செய்ய தடையிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மாநில அரசு ஒரு புதிய தேசிய ஒழுங்குமுறை அமைப்பையும் நிறுவியுள்ளது. எதிர்காலத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்காக இணக்க சோதனைகளை இரட்டிப்பாக்க நடவடிக்கையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுடன் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாய குழந்தை பாதுகாப்பு பயிற்சி வழங்கப்படுவதும் இதில் இடம்பெறுகிறது.