திபெத்திய பெளத்தர்களுக்கான ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, தாம் இறந்தபின் ஒருவருக்கு வாரிசு இருப்பார் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் என்பது, தலாய் லாமாவின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக புதன்கிழமை (ஜூலை 2) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
தலாய் லாமாவின் வாரிசு குறித்த இந்த அறிவிப்பு, திபெத்தியர்களுக்கும், தலாய் லாமாவை சீன ஆட்சிக்கெதிரான அமைதியான எதிர்ப்பின், இரக்கத்தின் மற்றும் திபெத்திய கலாச்சார அடையாளத்தின் சின்னமாகக் காணும் உலகளாவிய மக்கள் கூட்டத்துக்கும் ஒரு முக்கியமான அத்தியாயமாகும்.
இந்த அறிக்கையின் மூலம் தலாய் லாமா தனது மறுபிறவியைத் தானே நிறுவிய ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனத்தினால் மட்டுமே அடையாளம் காண அனுமதியுள்ளதாகவும், அவரது வாரிசு சீனாவிற்கு வெளியே பிறப்பார் என்றும், சீன அரசு பெய்ஜிங் தேர்ந்தெடுக்கும் எவரையும் அங்கீகரிக்கக் கூடாது என்றும் தனது பின்தொடர்பவர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு முன், தலாய் லாமா “தொடர்ச்சி இருக்காமல் முடிவடையலாம்” என்றும், தான் கடைசி தலாய் லாமாவாக இருக்கலாம் என்றும் கூறியிருந்த நிலையில், தற்போது அவர் அவ்வாரான கருத்துகளை மாற்றியுள்ளார்.
திபெத்திய பாரம்பரியத்தின்படி, துறவியின் ஆன்மா மறுபிறவி எடுத்து பிறந்து வரும் குழந்தை மூலமாக அந்த வரிசை தொடர்கிறது. 14வது தலாய் லாமா 1935 ஜூலை 6ஆம் தேதி, தற்போது சீனாவின் கிங்காய் மாகாணமாக காணப்படும் பகுதியில் பிறந்தவர்.
இரண்டு வயதில் இருந்தே அவர் திபெத்திய துறவிகளால் மறுபிறவியாக அடையாளம் காணப்பட்டார். 1959 ஆம் ஆண்டு சீன ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்குப் பின் அவர் இந்தியாவுக்குத் தஞ்சம் புகுந்தார். தற்போது அவர் தர்மசாலாவில் வாழ்கிறார்.
தலாய் லாமா 1989 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இன்று, அவர் உலகின் மிகச்சிறந்த ஆன்மீக தலைவர்களில் ஒருவராக பரவலாக மதிக்கப்படுகிறார்.