ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய நகரத்தில் உள்ள பொது நிலத்தில் டன் கணக்கில் மரக் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்காக அவருக்கு 30,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் ஒன்றை Hornsby Shire கவுன்சில் தங்களது அதிகாரப்பூர்வ இணையத்தில் பகிர்ந்து, இத்தகைய நடத்தை எதிராக பொதுமக்களை எச்சரித்துள்ளது. குறிப்பாக, இந்த வகையான செயல்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதுடன், பொதுநலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கவுன்சில் தெரிவித்துள்ளது.
மரக் கழிவுகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட நபரிடம் கவுன்சில் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அவர் அதை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாட்டுச் சட்டம் அடிப்படையில் அவருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது.
“கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்து வகையான கழிவுகளும் சட்டப்பூர்வமான கழிவு அகற்ற மையங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்,” என கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். மேலும், பொது நிலத்தில் இவ்வாறான கழிவுகளை அகற்றுவதில் கவுன்சிலுக்கு அதிக செலவுகள் ஏற்படும் என்றும், இது தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“மரங்களை வெட்டும் போது கிடைக்கும் மரத்தூளை குடியிருப்பாளர்கள் உரமாகவோ, பண்டல்களுக்கு அடியாகவோ பயன்படுத்தலாம். ஆனால், வணிக நோக்கில் செயற்படும் யாரும் தங்கள் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவது முற்றிலும் தவறானது,” என்று கவுன்சில் உறுதியாக தெரிவித்துள்ளது.