கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 3 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பெறுமதியுள்ள சிகரெட்டுகளை கடத்திய இலங்கை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், தேரணியகலைைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த காலத்தில் துபாயில் வீட்டு வேலைகளில் வேலை பார்த்துவருவதுடன், இன்று அதிகாலை துபாயில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.
அவர் கொண்டு வந்த இரண்டு பயண பொதிகளை சோதனையிட்ட போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 23,000 சிகரெட்டுகள் அடங்கிய 115 பெட்டிகள் சுங்க அதிகாரிகளால் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, சந்தேகநபரை சுங்க அதிகாரிகள் உடனடியாக கைது செய்துள்ளனர். இந்தச் சிகரெட்டுகள் இலங்கையில் எந்த வலையமைப்புக்கு கொண்டு வரப்பட இருந்தன? யார் யார் இதில் தொடர்புடையவர்கள்? என்பன தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.சர்வதேசமான முறையில் சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சிகள் கடுமையாக தடுக்கப்படும் என்றும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுங்கத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.