இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் Playoff சுற்றின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த போட்டியில் தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும்.
போட்டியில் வெற்றிபெறும் அணி நேற்றைய தினம் தோல்வியடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நாளைய தினம் மோதவுள்ளது.
இதேவேளை நேற்று நடைபெற்ற Playoff சுற்றின் முதலாவது போட்டியில் வெற்றிபெற்று ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 144