2025ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில், யாழ் மாவட்டத்தில் இறப்புகளை விட பிறப்புகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன என வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் திரு. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவலுக்கமைய இதுபற்றி தெளிவான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, 2025 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 1,572 பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, 1,373 இறப்புகளும் அதே காலத்தில் பதிவாகியுள்ளன.
இதனால், 199 பிறப்புகள் அதிகமாக உள்ளதுடன், இது மாவட்டத்திலுள்ள மக்கள் வளர்ச்சிக்கு உறுதியான ஒரு சான்றாக கருதப்படுகிறது.
இதுபோன்ற புள்ளிவிவரங்கள், மக்கள் தொகை வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சமூக சேவைகள் திட்டமிடலுக்கான முக்கிய ஆதாரங்களாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post Views: 194