இஸ்ரேலின் வான்படை விமானங்கள் மற்றும் தாங்கிகள் காசா நகரின் சில பகுதிகளை நேரடி தாக்குதலுக்கு உட்படுத்தியுள்ளன.
இது, காசாவின் மிகப்பெரிய நகர்ப்புறப் பகுதியைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டங்களின் நடுவில் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் கிட்டத்தட்ட 10 இலட்சம் பாலஸ்தீனியர்கள் மீது பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நகரத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தடையற்ற வெடிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 64 பேர் கொல்லப்பட்டதாக, சுமார் 300 பேர் காயமடைந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இஸ்ரேலிய தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்ட முதலே, ஹமாஸ் அறிக்கை படி, மொத்த உயிரிழப்பு 62,686 ஆகவும், காயம் அடைந்தோர் 157,951 ஆகவும் உயர்ந்துள்ளதாக தெரிய வருகிறது.
Post Views: 177