முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்திற்கு மிகவும் தேவையானவர்கள் எனவும், அவர்களைச் சந்திக்க வேண்டிய உள்ளூராட்சி செயலாளர்கள் அவர்களை அலைக்கழிப்பது வருந்தத்தக்கது எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் ஏற்பாட்டில், ‘உள்ளூராட்சி விழா – 2024’ நிகழ்வு நேற்று வேலணை மத்திய கல்லூரியின் துரைச்சாமி மண்டபத்தில் நடைபெற்றது. சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
“மக்களுடன் உள்ளூராட்சி மன்றங்கள் நெருக்கமாக செயல்பட வேண்டும். மக்களுக்கு பல சேவைகள் உள்ளூராட்சி மன்றங்களால் கிடைக்கின்றன. ஆனால் அவை சரிவர வழங்க சிறந்த முகாமை அவசியம்
மேலும், உள்ளூராட்சி மன்றங்களின் வருமானம் எதிர்காலத்தில் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும், தற்போதைய நிலைப்படி, மன்றங்கள் தங்களின் வருமானத்தில் 20% ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவழிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“சில செயலாளர்கள் மக்களை நேரில் சந்திக்கவேயில்லை. அதிகாரிகள், மக்களுக்காகவே பதவிகளில் உள்ளோம் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்” என ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்தினார்.