ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில், பிரபல நாவலாசிரியரும் பத்திரிகை ஆசிரியருமான அலெக்ஸாண்ட்ரா ஃப்ரோலிச் தமது ஹவுஸ்போட்டில் மரணமடைந்த நிலையில், போலீசார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஹாம்பர்க் காவல்துறையின் அறிக்கையின்படி, மூர்ஃப்லீட் பகுதியில் அமைந்துள்ள ஹவுஸ்போட்டில் செவ்வாய்க்கிழமை காலை 58 வயதான ஃப்ரோலிச் உயிரிழந்த நிலையில் உறவினர்களால் கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து, இது ஒரு கொலை சம்பவம் என சந்தேகித்து போலீசும் பொது வழக்கறிஞரின் அலுவலகமும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
“மரணத்தை சுற்றியுள்ள சூழ்நிலைகளை உணர்த்தக்கூடிய எந்தவொரு தகவலையும் பொதுமக்கள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என காவல்துறை தெரிவித்துள்ளது.
அலெக்ஸாண்ட்ரா ஃப்ரோலிச் தனது எழுத்துப் பயணத்தை பத்திரிகையாளர் எனத் தொடங்கி, கீவ் நகரில் பெண்களுக்கான பத்திரிகை ஒன்றை நிறுவினார். பின்னர், ஜெர்மனின் க்னவுர் பதிப்பகம் மூலம் தனது முதல் நாவலை வெளியிட்டார்.
பெங்குவின் பதிப்பகத்தின் தகவலின்படி, ஃப்ரோலிசின் நாவல்கள் “My Russian Mother-in-Law and Other Catastrophes” மற்றும் “There’s Always Someone Dying” ஆகியவை ஸ்பீகல் சிறந்த விற்பனையாளர் பட்டியலில் இடம் பெற்றன.
மரணத்தின் பின்னணி தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.