Thayagam Tamil Radio Australia

புதுடெல்லி–இந்தூர் விமானத்தில் அவசர தரையிறக்கம்

August 31, 2025

Spread the love

புதுடெல்லியிலிருந்து இந்தூர் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக திரும்பி தரையிறக்கப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், வலது இயந்திரத்தில் தீப்பற்றும் அபாயம் ஏற்பட்டதால் எச்சரிக்கை மணி ஒலித்தது. இதைக் கருத்தில் கொண்டு விமானி உடனடியாக டெல்லி விமான நிலையத்துக்கு தகவல் வழங்கினார். தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறினர். அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. ஏர் இந்தியா நிறுவனமும் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறதாக தெரிவித்துள்ளது.

சமீபத்தில், ஏர் இந்தியா விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும் நிகழ்வுகள் பயணிகளுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன என்று இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.