கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மாசி கருவாட்டு சாம்பல் போத்தல்களுக்குள் மறைத்து வைத்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த மூவரை நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாசி போத்தலுக்குள் சூட்சுமம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் போதை மாத்திரை விற்பனை தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து மூவரைக் கைது செய்தனர்.
- கைது செய்யப்பட்ட நபர்கள், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் கருவாட்டு மாசி சாம்பல் போத்தல்களை எடுத்து வந்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
- இவ்வாறு கொழும்பில் இருந்து மாசி சாம்பல் போத்தல்களை எடுத்து வரும்போது, அவற்றுக்குள் சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளையும் கடத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 257