மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவை :
* மகாசிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து எந்த பூஜை சடங்குகளையும் தொடங்கும் முன் முதலில் புனித நீராட வேண்டும். குளித்துவிட்டு சுத்தமான மற்றும் பிரகாசமான ஆடைகளை அணியுங்கள்.
தங்கள் வீட்டையும், சிவபெருமான் இருக்கும் சிறப்பு பூஜை அறையையும் சுத்தம் செய்ய வேண்டும்.
சிவபெருமானை மகிழ்விக்க உங்களால் முடிந்த இடங்களில் ஜலாபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகத்தை தூய்மையான அர்ப்பணிப்புடனும் பக்தியுடனும் செய்யுங்கள்.
உங்களால் செய்ய முடிந்தால் மட்டுமே அன்றைய தினம் முழுவதும் உபவாச விரதத்தை பின்பற்றவும். வயதானவர்கள் பால், பழங்களை சாப்பிட்டு விரதம் அனுஷ்டிக்கலாம். முக்கியமாக மௌன விரதம் கடைபிடிப்பது உயர்வான வாழ்க்வை தரும்.
* அன்றைய தினம் உங்களால் முடிந்த அளவு தானம், தர்மம் செய்ய வேண்டும். சிவன் கோவில்களில் அன்னதானம் செய்ய பொருளாகவோ, பணமாகவோ உதவி செய்யலாம்.
அன்றைய தினம் அமைதியாக சிவ சிந்தனையுடன் சிவபெருமானை மனதிற்குள் தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
* சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற இந்த புனித நாளில் பக்தி பாடல்கள் மற்றும் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
* மகாசிவராத்திரி அன்று இரவு உறங்காமல் சிவன் ஆலயங்களில் நடக்கும் நான்கு ஜாம பூஜைகளில் பங்கேற்க வேண்டும்.
* கர்ப்பிணிகள், முதியவர்கள் அல்லது உடல்நிலை சரியில்லாதவர்கள் உபவாச விரதத்தை தவிர்த்து சிவவழிபாட்டை மட்டும் செய்யலாம்.
மகாசிவராத்திரி விரதத்தின் போது செய்யக்கூடாதவை :
* மகாசிவராத்திரி அன்று யாரிடமும் சண்டை போடவோ, கடும் சொல்லை பயன்படுத்தவோ, வார்த்தைகளால் காயப்படுத்தவோ கூடாது.
* மக்கள் மகாசிவராத்திரி நாளில் சாத்வீக வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து, இறைச்சி, புகையிலை அல்லது மது அருந்துதல், வெங்காயம், பூண்டு, சூதாட்டம், சண்டை அல்லது துஷ்பிரயோகம் போன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
* மகாசிவராத்திரி அன்று அரட்டை அடிப்பது, டிவி பார்த்து அன்றைய பொழுதை கழிப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது.
* அன்றைய தினம் வில்வ இலைகளை சிவபெருமானுக்கு சமர்பிக்காமல் போனால் உங்கள் மகாசிவராத்திரி விரத பூஜை முழுமையடையாமல் போகலாம்.
* மகாசிவராத்திரி நாளில் உப்பு சாப்பிடக்கூடாது.
* மகாசிவராத்திரி நாளில் முடி மற்றும் நகங்களை வெட்டுவது அசுபமாக கருதப்படுகிறது.
* மகாசிவராத்திரி அன்று விரதச் சடங்குகளைச் செய்யும்போது சிவலிங்கத்தின் முழு பிரகாரத்தையும் சுற்றி வரக்கூடாது.