ஈரானை தாக்குவதற்கான திட்டங்களை நிறுத்துமாறு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா – ஈரான் அணு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி திட்டங்களை தாக்கலாம் என்ற தகவல்களுக்குப் பின்னர், டிரம்ப் நேரடியாக நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
“இப்போதெல்லாம் உங்கள் தாக்குதல் அமைதியை சிதைக்கும். பேச்சுவார்த்தைகள் முன்னேறிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஈரானை தாக்குவது சரியான நடவடிக்கை அல்ல” என்று டொனால்ட் டிரம்ப் நெதன்யாகுவிடம் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
ஈரான் – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான முக்கிய சிக்கல் இன்னும் தீரவில்லை.
முன்னதாக, ஈரான் “அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கம் எங்களிடம் இல்லை” என அறிவித்தாலும், யுரேனியம் செறிவூட்டல் செயல்முறையை கைவிட மறுத்துள்ள நிலையில், சர்வதேச நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளது.