இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் கன உலோகங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டதை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதிகாரசபையின் ஆய்வக சோதனைகளின் போது, சில தயாரிப்புகளில் உள்ள கன உலோகங்கள், அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறி இருந்ததுடன், அவை உடல்நலத்துக்கு தீவிர அபாயங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
49 தயாரிப்புகள் பட்டியலில்
நுகர்வோர் பாதுகாப்பு நலன் கருதி, தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்கள் என 49 தயாரிப்புகளின் பட்டியலையும், அவற்றின் பிராண்ட் பெயர்களையும், அனுமதிக்கப்பட்ட உலோக செறிவு வரம்புகள் உடனான தகவல்களையும் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
பாதிப்பு உள்ள தயாரிப்புகளை வாங்கவும், பயன்படுத்தவும் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை ஆரம்பம்
இத்தயாரிப்புகளை விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், எதிர்காலத்தில் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பாதிப்பு உள்ள தயாரிப்புகளின் முழுப் பட்டியலை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும், சமீபத்திய வர்த்தமானி அறிவிப்பிலும் காணலாம்.
இதைப்போன்ற அறிவிப்புகள் தொடர்பில் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவும், சந்தையில் வழங்கப்படும் தயாரிப்புகள் பற்றிய பத்திரமாக இருங்கள்.