செம்மணி மனித புதைகுழியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 12ஆம் நாளாக திங்கட்கிழமை (01 ஜூலை 2025) முன்னெடுக்கப்பட்டது.
இந்த அகழ்வுப் பணிகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மூத்த சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல்,
“சடலங்கள் நில மட்டத்திலிருந்து வெறும் ஒன்றரை அடி முதல் இரண்டடி வரை மட்டுமே புதைக்கப்பட்டுள்ளன,” என அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
புதிய பகுதிகளிலும் அகழ்வு தொடங்கப்பட்டுள்ளது இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது ஏற்கனவே அகழப்பட்ட பகுதிகளுக்கு அப்பாலான புதிய இடங்களிலும் இடம்பெற்று வருகிறது.
ரட்ணவேல் மேலும் கூறுகையில்:
“இந்த நிலம் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட இடமாகத் தெரியவில்லை. இது சடுதியாக, ஆவலுடன், ஒளிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் புதைக்கப்பட்ட இடமாகவே தெரிகிறது.”
சிறுவர்களின் எலும்புகள் கண்டுபிடிப்பு
அகழ்வுகளின் போது சிறுவர்களின் என்புத் தொகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த இடம் ஒரு குற்றம் நடைபெற்ற இடமாகவே மக்கள் மற்றும் சட்டவல்லுநர்களால் பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள், மிகுந்த கவனத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தினசரி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் முடிவுகள், ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.