செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பழைய மனிதப் புதைகுழி வழக்கையும், தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி வழக்கையும் ஒரே வழக்காக இணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பாதிக்கப்பட்டோரின் தரப்பு சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
அவரது விளக்கத்தில், முறையான நீதிமன்ற அனுமதி பெறப்பட்ட பின்னர் இந்த இரு வழக்குகளையும் ஒன்றாக இணைப்பது தொடர்பான உள்நோக்கு ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்றன என கூறினார்.
மேலும், பழைய வழக்கில் ஈடுபட்ட முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி, தற்போதைய அகழ்வுப் பணியில் ஈடுபட்ட அதிகாரியிடம் கடந்த கால விவரங்களை பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினரால் அடையாளம் காணப்பட்ட பகுதிகள் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் துப்புரவாக்கப்பட்டு, பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக அகழ்வுப் பணிகள் விரைவில் ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.