Thayagam Tamil Radio Australia

இந்தியாவிற்குள் மீண்டும் சிறுத்தைப் புலிகள்! மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை -01

September 21, 2022

Spread the love

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்கும் 23 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களே எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடையாளப்படுத்தப்பட்டுள்ள 20 கிராமங்கள்
யாழில் அதிகரிக்கும் போதை பொருள் பயன்பாடு! இதுவரையில் 10 பேர் உயிரிழப்பு – 320 பேர் கைது | 10 People Have Died In Jaffna Due To Drug Use

அதேவேளை யாழ்ப்பாணத்தில் அதிக போதைப்பாவனைக்கு உள்ளானவர்கள் வாழும் கிராமமாக சுமார் 20 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துச் செல்­லும் இந்­தப் போதைப் பொருள் பாவ­னை­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான முறை­யான வேலைத் திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சி­யல் தலை­வர்­கள், மதத் தலை­வர்­கள், சிவில் சமூ­கத்­தி­னர் முன்­வ­ர­வேண்­டும் என்று சமூக ஆர்­வ­லர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.