இங்கிலாந்தின் சவுத்என்ட் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள், முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் உயிரிழந்த உறவுகளை உணர்வுப்பூர்வமாக நினைவுகூர்ந்தனர்.
நேற்று மாலை, சூபரிஈஸ்ட் கடற்கரையோரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூர மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வின் போது நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன, பின்னர் நூற்றுக்கணக்கான மிதக்கும் விளக்குகள் கடலில் விடப்பட்டு, மறைந்தவர்களுக்கான மதிப்பளிப்பு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக, முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
Post Views: 371